வருக!! வருக!!

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

Saturday, February 25, 2012

சைவரின் உயிர் நூல்..

வணக்கம். நீண்ட ஓய்வுக்கு பின் மீண்டும் எழுத வேண்டும் என்கின்ற உத்வேகம் என்னுள் இன்று பிறந்திருக்கின்றது. இதற்கு நான் இன்று சந்தித்த, எனக்கு மிகவும் பழக்கமான அய்யா சைவப்பெரியார் சோ.சோ.மி அவர்கள் என்றுதான் சொல்ல வேணும். அய்யா அவர்களது படம் இந்த கட்டுரையுடன் இணக்கப்பட்டுள்ளது. திரு இராமலிங்கேசுவரர் ஆலயம் மலேசியாவில் மிகவும் நன்கு அறிமுகமான  திருக்கோவில் ஆகும். சிவாகமப்படி அமைக்கப்பெற்ற திருக்கோவில் என்று சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இத்திருக்கோவில் ஜாலான் மாரோப்,பங்சார்,கோலாலம்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இருபது நாள்களுக்கு முன்பு திருக்குடமுழுக்கு நடந்ததை ஒட்டி மண்டலாபிசெகம் நடைபெறும் வகையில் தமிழ் நாட்டு சைவச்சான்றோர்கள் வந்தவன்னமாகவும் பொழிவு செய்தவன்னமாகவும் இருக்கின்றனர். அதில் ஒருவரே அய்யா அவர்கள்..
 அய்யா அவர்களின் பொழிவுக்கு பின் இன்று முதல் நான் ஒரு நாளுக்கு ஒரு திருவாசக பாடலை படித்துணரலாம் என்றே முடிவு செய்துள்ளேன்.  அய்யா அவர்கள் சைவரின் உயிர் நூல்கள் திருவாசகம் மற்றும் திருமந்திரம் என்று குறிப்பிட்டார்கள். வாசகர்கள் பலர் மனதில் 'ஏன் அப்படி?'  என்ற வினா எழும்பியிருக்கும். இனிதே 'தேனமுது' என்ற தலைப்பில் திருவாசகத்தின் சிறப்பைச்சொல்லும் விரிவுரையுடன் தொடங்குகிறேன்..